தேசிய அறிவியல் மாநாடு இன்று இணைய வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் மாநில அளவில் தேர்வான நாரணாபுரம் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஸ்ரீநிதி மற்றும் சிவானி ஆகியோர் கலந்து கொண்டு அவர்களின் செயல்திட்டத்தினை விளக்கினர்.
ஆறாம் வகுப்பு மாணவி N.கோபிகா தனது பிறந்த நாளிற்கு திருக்குறள் புத்தகத்தை பள்ளி நூலகத்திற்குப் பரிசாக பள்ளித் தலைமையாசிரியர் முனைவர் திரு. புகழ் அவர்களிடம் வழங்கினார். தலைமையாசிரியர் மாணவியைப் பாராட்டி பேனா பரிசளித்தார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து! பத்தாம் வகுப்பு பயிலும் சிவானி மற்றும் ஸ்ரீநிதி ஆகியோரின் செயல் திட்டங்கள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டதற்கு மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் வழிகாட்டி ஆசிரியர் கருணைதாஸ் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் முனைவர் புகழ் ஆகியோரை பாராட்டி பரிசளித்தார்.
நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில் சாதனை! நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தனர். மாணவ மாணவிகளைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் முனைவர் திரு. புகழ் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியினை ஏற்றினார். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.